அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 23 மார்ச், 2010

'வரிசையில் நின்று தான் தண்ணீர் வாங்கணும்

2.'வரிசையில் நின்று தான் தண்ணீர் வாங்கணும்...!' விழிப்புணர்வு கூட்டத்தில் கவலை






ஊட்டி: 'ரேஷன் கடைகளில் தனியாக கார்டு வழங்கி, நீரை வினியோகிக்கும் காலம் விரைவில் உருவாகும்' என, விழிப்புணர்வு கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.  கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம். ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், 15வது வார்டில் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டது. உறுப்பினர் பிரபு வரவேற்றார்.



ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் பேசுகையில், ''நீர் சிக்கனம் குறித்து பள்ளிப் பாடங்களிலும், வீடுகளிலும் பயிற்றுவிக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் அதிகளவு தொட்டிகளில் நீரை சேமித்து வைத்து, நீர் வரும் நாட்களில் வீணாக்குகின்றனர்; இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் குறித்த விழிப்புணர்வு ஏற்படாத நிலை தொடர்ந்தால், ரேஷன் கடைகளில் தனியாக கார்டு வழங்கி, வினியோகிக்கும் காலம் விரைவில் உருவாகும்,'' என்றார்.



'நெஸ்ட்' சுற்றுச்சூழல் சங்க அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ''நீலகிரியில் உள்ள நீராதாரங்களில், புயல், மழை காலங்களில் ஏற்பட்ட மண்ணரிப்பால், மண் நிறைந்துள்ளது; நீரை தேக்கும் ஆற்றலை நீர் தேக்கங்கள் இழந்து வருகின்றன. காட்டேரி டேம், கோரிசோலா, மார்லிமந்து உட்பட நீர் தேக்கங்கள், பெயரளவில் மட்டும் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. பல காரணங்களால், மார்லிமந்து அணை மாசுபட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் கிடையாது; பருவமழையை நம்பியே விவசாயமும், நீர் தேவையும் உள்ளன. நீலகிரியில், அணைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செயல்திட்டம் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். நீரின் அவசியம், பாதுகாப்பு குறித்து சிறு குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும்; அப்போது தான், எதிர்கால சந்ததிகளுக்கு முக்கியத்துவத்தை அறிய முடியும்,'' என்றார்.



கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''நீலகிரியின் நீராதாரங்களை பாதுகாக்க வேண்டும். கூடலூர், கோத்தகிரியின் பல இடங்களில் நீர் தேடி அலைய வேண்டியுள்ளது; இதுபோன்ற அவலத்தை தவிர்க்க, உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை வேண்டும்,'' என்றார்.



ஊட்டி உதவும் கரங்கள் அமைப்பு செயலர் சுரேஷ் பேசுகையில், ''கோடை காலத்தில் மட்டுமல்லாமல், அனைத்து காலங்களிலும் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வசதி படைத்தவர்கள், நீர் விரயத்தை தவிர்த்தால், நீர் இல்லாத பகுதிகளுக்கு வினியோகிக்க முடியும்,'' என்றார். சங்கத் தலைவர் தேவதாஸ்ராவ் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர் இம்தியாஸ் முன்னிலை வகித்தார். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக