அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 1 ஏப்ரல், 2010

தூய்மை இருந்தால்... பக்கத்தில் அண்டாது நோய்

முக்கிய செய்திகள்




1.தூய்மை இருந்தால்... பக்கத்தில் அண்டாது நோய் : நுகர்வோர் சுற்றுச்சூழல் முகாமில் விழிப்புணர்வு
பந்தலூர்:'சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்துக் கொண்டால், நோயின் தாக்கம் பெருமளவு குறையும்' என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், தேவாலா ஜி.டி.ஆர்., பள்ளியில் நுகர்வோர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.




கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், போதிய விழிப்புணர்வு இல்லாமல் நுகர்வோர் ஏமாற்றப்படுகின்றனர். போலி விளம்பரங்கள், தரமற்றப் பொருட்கள் என, பல வழிகளிலும் நுகர்வோர் ஏமாற்றப்படுகின்றனர். ஆடம்பரத்தை தவிர்த்து சேமித்தால், ஏமாற்றத்தை தடுக்கலாம்,'' என்றார்.


      பந்தலூர் மனித உரிமை நுகர்வோர் சங்கத் தலைவர் விஜயசிங்கம் பேசுகையில், ''நுகர்வோருக்கு உள்ள உரிமைகளை முறையாக பயன்படுத்தினாலே ஏமாற்றம் இருக்காது. இனிப்புப் பண்டங்கள், குளிர்பானங்களில் கலக்கப்படும் ரசாயனங்கள், அதன் பாதிப்பு குறித்து, பள்ளி மாணவ, மாணவியர் தெரிந்துக் கொண்டால், விழிப்புணர்வு ஏற்படும்,'' என்றார்.


        உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்.லோகநாதன் பேசுகையில், மாணவர்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், சுற்றுப்புற தூய்மை, தூய்மையற்ற சுற்றுப்புறங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.


          கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்.கதிரவன் பேசுகையில், மருந்துகள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். உற்பத்தி, காலாவதி தேதி மற்றும் விற்பனை விலை குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். டாக்டரின் ஆலோசனை இல்லாமல், மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்துக் கொண்டால், நோயின் தாக்கம் பெருமளவு குறையும்,'' என்றார்.


பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார்.


வேளாண் பொறியியல் துறை உதவி அலுவலர் சுந்தரலிங்கம், எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பெள்ளு, ரத்ததான குழும நிர்வாகி புவனேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


    நமது உரிமைகள்' எனும் தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.


    பருவநிலை மாற்றம், நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. உதவி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக