அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

'நிற்கும்'பாரம்பரிய சின்னங்கள்

4.பாதுகாத்தால் மட்டுமே எதிர்காலத்தில் 'நிற்கும்'பாரம்பரிய சின்னங்கள் 'பொக்கிஷம்': உள்ளூர் மக்களுக்கு வேண்டும் விழிப்புணர்வு











ஊட்டி: 'சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால், பாரம்பரிய சின்னங்கள் அழிவின் பாதையில் செல்கின்றன,' என ஊட்டியில் நடந்த பாரம்பரிய தின நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், ஊட்டி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது. ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் நிலைய அதிகாரி ரவீந்திரநாத் பேசுகையில், ''கடந்த 2005ம் ஆண்டு நீலகிரி மலை ரயிலுக்கு உலக பாரம்பரிய அந்தஸ்தை யுனெஸ்கோ வழங்கியது. பாரம்பரியமிக்க ரயில் நிலையத்தில் உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.














நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ''இந்தியாவில் பாரம்பரியம் என்பது வாழ்க்கையின் ஒரு பாகமாக உள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஆதிவாசி மக்களின் பாரம்பரியங்களும், நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகம், கல்வெட்டுகள், ஆங்கிலேயர் கால கட்டடங்கள் என அனைத்தும் நீலகிரியின் பாரம்பரிய தினம் கொண்டாடுவதில் பொருத்தமாக உள்ளது. சுற்றுச்சூழலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் பாரம்பரிய சின்னங்கள் அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது,'' என்றார்.














கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''நீலகிரி மாவட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இதனின் முக்கியத்துவம் சுற்றுலாத்துறை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


தமிழக அரசு மாவட்டத்தை பாரம்பரியமிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும். நாகரீக வளர்ச்சி பாரம்பரியத்தை புறம்தள்ளிவிட்டது,'' என்றார்.














ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் பேசுகையில், ''மலை ரயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இது பல்லாயிரம் ஊழியர்களின் உழைப்பு மற்றும் உயிர் தியாகம், இயற்கை அழிவுகளால் உருவானது. அந்த காலகட்டத்தில் அடிமை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தி கடுமையான சூழலில் கடுங்குளிர், மழையில் ரயில்பாதை, பாலங்கள் உருவாக்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் மட்டுமல்லாமல் வரலாற்று சிறப்புடையது. அவற்றில் பல்வேறு அரண்மனை ஓட்டல்களாக மாற்றப்பட்டுவிட்டது. தேவாலயங்கள், சித்தர்கள் தவம் செய்து உருவான காசி விஸ்வநாதர் கோவில், ஆன்மீக தலைவர்கள் அரவிந்தர், மகாத்மா காந்தி, தத்துவஞானி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வருகை புரிந்து சொற்பொழிவு நிகழ்த்திய இடங்களை பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்களாக அறிவிக்க வேண்டும்,'' என்றார்.


ஊட்டி உதவும் கரங்கள் செயலர் சுரேஷ்குமார் பேசுகையில், ''நீலகிரியின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்களை சுற்றுலா துறை மூலம் மாநில அரசும் எடுத்து செல்ல வேண்டியது அவசியம். இனிவரும் காலங்களில் சுற்றுலாத்துறை பாரம்பரிய தினத்தை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும்,'' என்றார். சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், ஊட்டி நகர விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஊட்டி உதவும் கரங்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக