அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 29 ஏப்ரல், 2010

கண் பரிசோதனை மையம் பந்தலூரில் துவக்க விழா

9.கண் பரிசோதனை முகாம் பந்தலூரில் துவக்க விழா











பந்தலூர்: பந்தலூரில் கண் பரிசோதனை மையம் துவங்கப்பட்டது.கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், பந்தலூர் கண் பரிசோதனை மையம் சார்பில், பந்தலூரில் கண் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லியாளம் நகரமன்றத் தலைவர் காசிலிங்கம், மையத்தை திறந்து வைத்து பேசுகையில், ''ஏழை மக்களின் நலன் கருதி, மாதந்தோறும் இலவச கண் சிகிச்சை முகாம், அவ்வப்போது ரத்த தான முகாம் நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இந்த சேவையை விரிவுபடுத்த, கண் பரிசோதனை மையம் துவங்கியுள்ளது மேலும் பயனளிக்கும்,'' என்றார்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள் பழனிசாமி, தேவதாஸ் முன்னிலை வகித்தனர். இலவச கண் சிகிச்சை முகாமில், 70க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். மைய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக