அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 4 மே, 2010

காலாவதி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு டாக்டரின் ஆலோசனையின் படி தான் மருந்து வாங்க வேண்டும்

'டாக்டரின் ஆலோசனையின் படி தான் மருந்து வாங்க வேண்டும்'

ஊட்டி: 'டாக்டரின் ஆலோசனையின் படி தான் மருந்து வாங்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, மாவட்ட மக்கள் மையம், கிராம நுகர்வோர் மன்றங்கள் சார்பில், காலாவதி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் ஊட்டியில் நடத்தப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன், காலாவதியான மருந்துகள் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது, தமிழகத்தை பரபரப்பாக்கியது. சுதாரித்துக் கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், தமிழகத்தின் பல இடங்களில் உள்ள மருந்து குடோன்கள், மருந்துக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஊட்டியிலும், காலாவதியான மருந்துகள், கால்வாயில் கொட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், காலாவதி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம், ஊட்டியில் நடத்தப் பட்டது.

       மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்- மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம், பொதுச் செயலர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர். 

   மாவட்ட மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். கலாவதி மருந்துகள் குறித்த துண்டு பிரசுரங்கள், பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டன. பிரசாரத்தில், 'முடிந்தவரை நம்பகமான, தெரிந்த மருந்துக் கடைகளிலேயே மருந்துகள் வாங்க வேண்டும்; டாக்டரின் ஆலோசனையின் படி தான் மருந்து வாங்க வேண்டும்; ஒருவருக்கு வழங்கும் மருந்தை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது; மருந்துகளை வாங்கும் போது, தயாரிப்பு மற்றும் முடியும் தேதியை பார்த்து வாங்க வேண்டும். மருந்துக்கான ரசீதை கண்டிப்பாக வாங்க வேண்டும்;

       மருந்தின் நிறம், தோற்றம் இவைகளில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், 'மருந்து ஆய்வாளர் (டிரக் இன்ஸ்பெக்டர்) அல்லது மருந்து கட்டுப்பாடு அதிகாரி, தேனாம்பேட்டை, சென்னை-18' என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண்டும்; போலி மருந்துகள் என தெரியவந்தால், மாநில மருந்து கட்டுப்பாட்டாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்; விபரங்களுக்கு, நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பு கிளைத் தலைவர் 93451 - 15337, மாவட்ட பொதுச் செயலர் 93453 - 98085, 94425 - 30533, 94885 - 20800, 94880 - 94501 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெற வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

       நிர்வாகிகள் வனிதா, சுப்ரமணி, விஜயகுமார், கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் மஞ்சு சிவா, ஜெயபிரகாஷ், மோகன், கோகிலா, ராஜேந்திரன், சுரேஷ், கணேசன், ராஜா, சந்திரன், பாபு, கூட்டமைப்பு கிளை நிர்வாகிகள் கிப்சன், டேவிட், ராஜரத்தினம், மக்கள் மைய நிர்வாகிகள் செல்வராஜ், சுப்ரமணி, பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக