அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 30 மே, 2010

லஞ்​சம் வாங்​கு​வ​தில் ​ நவீ​னத்​து​வம்!

லஞ்​சம் வாங்​கு​வ​தில் திற​மை​சா​லி​கள் யார் என்று உலக அள​வில் போட்டி நடத்​தி​னால் நிச்​ச​யம் இந்​தி​யர்​கள்​தான் முத​லி​டத்​தைப் பிடிப்​பார்​கள்.​ அதி​லும் ஊழல் தடுப்பு,​​ கண்​கா​ணிப்​புப் பிரி​வு​க​ளை​யும் லோக் அயுக்​தா​வை​யும் நிய​மித்த பிற​கும்​கூட லஞ்​சம் வாங்​கு​வது என்​றால் சாதா​ர​ணம் இல்லை.​​ லஞ்​சத்தை எங்கே,​​ எப்​படி,​​ யார் மூலம் வாங்​கு​வது என்று மத்​திய,​​ மாநில அரசு அதி​கா​ரி​கள் வார இறு​தி​யில் ரூம் போட்டு யோசிக்​கி​றார்​கள் என்​றால் மிகை​யில்லை.​ இன்ன வேலைக்கு இன்​னின்ன பத​வி​க​ளில் உள்​ள​வர்​க​ளுக்கு இவ்​வ​ளவு என்று அவர்​கள் "ரேட்' நிர்​ண​யம் செய்​யும் துல்​லி​யம் இருக்​கி​றதே அது ஊதி​யக் கமி​ஷன்​க​ளுக்​கும் மத்​திய -​ மாநில அர​சு​க​ளுக்​கு இடையே வரு​மா​னத்​தைப் பிரித்​துத் தரும் நிதிக் கமி​ஷன்​க​ளுக்​கும் கூட கிடை​யாது.​​ மாநில அர​சு​க​ளைப் பொறுத்​த​வ​ரை​யில் லஞ்​சம் வாங்​கு​வ​தில் முத​லி​டம் பிடிப்​பது வரு​வாய்த்​து​றை​தான்.​ அர​சுக்கு வரு​வாய் வரு​கி​றதோ இல்​லையோ அதி​கா​ரி​க​ளுக்கு வீடு தேடி வந்​து​வி​டு​கி​றது.​ என​வே​தான் அந்​தத் துறைக்கு வரு​வாய்த்​துறை என்று பெயர்.​ அதில் நிய​ம​னம் பெறு​வ​தற்​குத்​தான் எத்​தனை பரிந்​து​ரை​கள்,​​ கட​வு​ளி​டம் வேண்​டு​தல்​கள்,​​ போட்​டித் தேர்​வு​கள்...​​ சமீ​பத்​தில் தமிழ்​நாட்​டில் கிராம நிர்​வாக அலு​வ​லர் பத​விக்​கான தேர்​வுக்கு முது​க​லைப் பட்​ட​தா​ரி​கள்,​​ ஆய்​வி​யல் நிறை​ஞர்​கள்​கூட அலை மோதி​னார்​கள்.​ அர​சி​தழ் பதிவு பெறாத வேலை​தான்;​ ஆனால் வரு​மான வரி கூட செலுத்த வேண்​டிய அவ​சி​யம் இல்​லாத -​ அதே சம​யம் வரு​மா​னத்​தைப் பெருக்​கிக் கொள்​ளக்​கூ​டிய பத​வி​யா​யிற்றே?​ அவ்​வ​ளவு ஏன்,​​ கிராம அள​வில் தலை​யாரி பத​விக்கு நிய​ம​னம் என்​றால்​கூட தமிழ் நாட்​டில் மிகப்​பெ​ரிய அடி​த​டியே நடக்​கும்.​​ லஞ்​சம் வாங்​கு​கி​ற​வர்​கள் நேர​டி​யா​கக் கேட்​ப​தில்லை.​ சிலர் கூச்​சம் கார​ண​மா​கக் கேட்​ப​தில்லை,​​ சிலர் குறை​வா​கக் கேட்டு நஷ்​டம் அடைந்​து​வி​டு​வோமோ என்று கேட்​ப​தில்லை.​ மற்​ற​வர்​கள் பக்​கத்து சீட்​டில் இருப்​ப​வர்​கள் காதில்​வி​ழுந்து அவர்​க​ளும் பங்கு கேட்​பார்​களோ என்று கேட்​ப​தில்லை.​​ பழக்​கப்​பட்ட மூத்த ஊழி​யர்​கள்​தான் இந்த பேரங்​க​ளையே நடத்​து​கி​றார்​கள்.​ அலு​வ​லக வேலை​க​ளைப் பார்த்​துக் கொண்டே அடிக்​குர​லில் கேட்​ப​தும்,​​ ஏதா​வது கசங்​கிய தாளின் ஒரு மூலை​யில் கிறுக்​கிக் காட்​டு​வ​தும்,​​ அடை​யாறு கலா​ஷேத்​ரா​வில் பயிற்சி பெறா​ம​லேயே அட​வு​கள்,​​ கண் அசை​வு​கள்,​​ உதட்​டுச் சுழிப்​பு​கள் ஆகி​யவை மூலம் பேரங்​களை அவர்​கள் நடத்​தும் சாமர்த்​தி​யமே சாமர்த்​தி​யம்.​​ லஞ்​சம் வாங்​கு​வது நல்​லதா,​​ கெட்​டதா என்​ப​தெல்​லாம் இருக்​கட்​டும்;​ இந்த லஞ்​சம் மட்​டும் இல்லை என்​றால் தமிழ் நாட்​டில் எத்​தனை அரசு ஊழி​யர்​கள் வறு​மைக் கோட்​டுக்​குக் கீழே போயி​ருப்​பார்​கள் இந்த விலை​வாசி உயர்வு காலத்​தில்.​ ஏதோ லஞ்​சம் வாங்க வழி​யி​ருப்​ப​தால்​தான் அவர்​க​ளால் அன்​றாட வாழ்க்​கை​யை​யும் நடத்​திக்​கொண்டு,​​ ​ பிள்​ளை​க​ளைக் கல்​லூ​ரி​யில் படிக்க வைத்து,​​ திரு​ம​ணம் செய்து கொடுத்து,​​ சொந்​த​மாக வீடு கட்டி,​​ பெண்​க​ளுக்கு நிறைய நகை போட்டு சீர் செய்து மாமி​யார் வீட்​டுக்கு அனுப்ப முடி​கி​றது.​​ வெறும் சம்​ப​ளம் மட்​டுமே வாங்​கி​னால் சாமி​யா​ரா​கக்​கூட பணம் போதாது.​ ​(சாமி​யார் என்​றால் ஆஸ்​ர​மம் வைக்க வேண்​டும்,​​ அங்கே சாப்​பாட்​டுச் செல​வோடு மாத்​திரை,​​ மருந்​துக்​கும் அதி​கம் செல​விட நேரி​டும்.​ கேமரா செலவு தனி...)​​ இந்த நிலை​யில் எந்த அச​டும் லஞ்​சத்தை தான் வேலை செய்​யும் டேபி​ளுக்​குக் கீழேயே ரொக்​க​மாக கத்​தை​யாக வாங்கி மாட்​டிக் கொள்ள விரும்​பு​வ​தில்லை.​ ​​ லஞ்​சத்தை பார்ட்​டி​யி​ட​மி​ருந்து வாங்​க​வும் அதை உரி​ய​வ​ரி​டம் கொண்டு போய்ச் சேர்க்​க​வும் முக​மை​யா​ளர்​கள் வந்​து​விட்​டார்​கள்.​ இவர்​களை மாநில அர​சுத் தேர்​வா​ணை​யமோ,​​ மத்​திய அரசு தேர்​வா​ணை​யமோ தேர்வு செய்​வ​தில்லை.​ அரசு ஊழி​யர்​களே அவர்​க​ளு​டைய அலு​வ​ல​கத்​துக்கு வந்து போகும் டீக்​க​டைக்​கா​ரர்​கள்,​​ ஜெராக்ஸ் கடை உரி​மை​யா​ளர்​கள் போன்​றோரி​லி​ருந்து தேர்வு செய்​கின்​ற​னர்.​​ லஞ்​சப் பணத்தை அதி​கா​ரி​கள் கையால் தொடு​வ​தில்லை என்​ப​தால் அவர்​தான் லஞ்​சம் வாங்​கி​னார் என்​பதை போலீ​ஸô​ரால் நிரூ​பிக்க முடி​யா​மல் லஞ்ச வழக்கு தோற்​று​வி​டு​கி​றது.​​ லஞ்ச விஷ​யத்​தில் பிற மாநி​லங்​க​ளுக்​குத் தமி​ழ​கம்​தான் முன்​னோடி.​ இங்கே லஞ்​சத்தை முக​மை​யா​ளர்​கள்​தான் வாங்கி வைத்து,​​ அலு​வ​ல​கம் முடிந்​த​வு​டன் உரிய அதி​கா​ரி​க​ளி​டம் சேர்க்​கின்​ற​னர்.​ ரொக்​க​மா​கச் சில சம​யங்​க​ளி​லும்,​​ பொரு​ளாக பல சம​யங்​க​ளி​லும் கொடுக்​கின்​ற​னர்.​ கம்ப்​யூட்​டர்,​​ கட்​டில்,​​ மேஜை,​​ மரச்​சா​மான்​கள்,​​ கேமரா போன்ற அத்​தி​யா​வ​சி​யப் பண்​டங்​கள் வீடு தேடி வந்​து​வி​டு​கின்​றன.​​ அதி​கா​ரி​கள் கோடை விடு​மு​றைக்கு சிம்லா,​​ டார்ஜி​லிங்,​​ ஊட்டி அல்​லது வெளி​நா​டு​க​ளுக்​குப் போக​வும் இந்த ஏஜெண்​டு​களே டிக்​கெட் வாங்கி,​​ ரூம் போட்டு எல்​லா​வற்​றை​யும் செய்​து​வி​டு​கின்​ற​னர்.​ அதற்​காக இவர்​க​ளுக்கு சிறிய தொகை சேவைப் பண​மாக அவ்​வப்​போது தரப்​ப​டு​கி​றது.​ இது சாதா​ரண சேவையா என்ன?​ அரசு ஊழி​யர்​க​ளுக்கு லஞ்​ச​மும் கிடைக்க வேண்​டும்,​​ அதே​ச​ம​யம் அவர்​கள் லஞ்ச ஒழிப்​புப் போலீ​ஸô​ரி​டம் சிக்​கா​ம​லும் இருக்க வேண்​டும் என்​றால் இந்த ஏஜெண்​டு​க​ளின் துணை இல்​லா​மல் முடி​யுமா?​​ சரி,​​ இந்​தப் பணத்​தை​யெல்​லாம் ஏஜெண்​டு​கள் ஒழுங்​கா​கத் தரு​வார்​களா,​​ கணக்​கில் ஏமாற்​றி​வி​டு​வார்​களா என்றா கேட்​கி​றீர்​கள்?​ அரசு அதி​கா​ரி​கள் என்ன விவ​ரம் இல்​லா​த​வர்​களா?​ அவர்​க​ளுக்கு வர வேண்​டிய பணத்தை எந்த நாளும் இழந்து மோசம் போக​மாட்​டார்​கள்.​ அவர்​களை மீறி ஏஜெண்டு நம்​பிக்​கைத் துரோ​கம் செய்​தால் அந்​தப் ​ பாவத்​துக்​காக அவ​ரைச் சும்மா விட​மாட்​டார்​கள்.​​ லஞ்​சம் என்​பது தொடர்​க​தை​தான்,​​ முடிவே இல்​லா​தது.​ இப்​படி வாங்கி வாங்​கியே பழக்​கப்​பட்ட அதி​கா​ரி​கள் தங்​கள் அலு​வ​ல​கங்​க​ளி​லேயே தங்​க​ளின் கீழ் பணி புரி​கி​ற​வர்​க​ளி​டம் விடுப்பு அளிக்க,​​ சிறப்பு ஊதி​யம் தர,​​ வருங்​கால வைப்பு நிதியி​லி​ருந்து கடன் பெற,​​ வீடு கட்​டு​வ​தற்​கான கட​னுக்​கான நடை​மு​றை​க​ளைப் பூர்த்தி செய்ய,​​ ஈட்​டிய விடுப்​பைப் பண​மாக்​கிக் கொள்ள லஞ்​சம் வாங்​கி​வி​டு​கி​றார்​கள்.​ ​​ சில சம​யம் சிக்​க​லான சீட்டி​லி​ருந்து ​(சிக்​கல் வேறு எது​வு​மில்லை,​துறை​வி​தி​களை எல்​லாம் படித்​துப்​பார்த்து ஒழுங்​காக வேலை செய்ய வேண்​டும்)​ பணம் சம்​பா​திப்​ப​தற்கு மட்​டுமே வழி​யுள்ள சீட்​டு​க​ளுக்கு மாற்​றித்​த​ர​வும் லஞ்​சம் வாங்​கப்​ப​டு​கி​றது.​ ""தமிழ்​நாட்​டில்​தான் லஞ்​சத்தை விஞ்​ஞான முறைப்​படி வாங்​கு​கி​றார்​கள்'' என்று அகில இந்​திய அள​விலே நமக்கு சிறப்பு இடத்தை அளித்​தி​ருக்​கி​றார்​கள்.​ என்ன இருந்​தா​லும் ""பகுத்​த​றி​வோடு'' செயல்​ப​டு​கி​ற​வர்​கள் அல்​லவா நாம்?​​ காற்று வீசா​மல் இருக்​க​லாம்,​​ காலரா பர​வா​மல் இருக்​க​லாம்,​​ லஞ்​சம் வாங்​கா​மல் அரசு அலு​வ​லர்​க​ளால் ஒரு நாளும் இருக்க முடி​யாது என்று இந்த விவ​கா​ரத்தை ஆழ ஆய்ந்​த​வர்​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​​ ​

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக