அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 28 ஜூன், 2010

உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மூலிகை டீ

 சமீபகாலமாக, உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலையில் நடை பயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்றவை பிரபலமாகி வருகின்றன. நடை பயிற்சிக்கு முன், ஒரு லிட்டர் நீரை குடிப்பது, முடிந்தவுடன் அருகம்புல் சாறு அருந்துவது தற்போது வழக்கத்தில் உள்ளது. சென்னை போன்ற இடங்களில் அருகம்புல்லை அரைத்து, சாறு எடுத்து, நடை பயிற்சி செல்வோரிடம் விற்பனை செய்கின்றனர். இந்த வகையில், திண்டுக்கல் உழவர் சந்தையில் டீ கடை நடத்தும் தாஸ் என்ற முதியவர், மூலிகை டீயை தயாரித்து விற்று வருகிறார். துளசி, வேம்பு, தூதுவளை, பனங்கற்கண்டு, சுக்கு ஆகியவற்றை பொடியாக்கி கருப்பட்டியுடன் கலந்து இந்த மூலிகை டீயை தாஸ் தயாரிக்கிறார். ஒரு கப் 3 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மூலிகை டீ யை வாக்கிங் செல்பவர்களும், சந்தைக்கு காய்கறி வாங்க வருபவர்களும் வாங்கி குடிக்கின்றனர். மூலிகை டீ மட்டுமல்லாமது, தாஸ் தயாரிக்கும் கேரட் ஜூசும் வெகு பிரபலம். "பளபளக்கும் கண்கள் தான் ஒரு மனிதனை ஆரோக்கியமானவனாக காட்டும். வைட்டமின் "பி' கண்களை பிரகாசமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த சத்து கேரட்டில் அதிகம். எனவே, கேரட் ஜூஸ் தயாரித்து ஒரு கிளாஸ் 10 ரூபாய்க்கு விற்கிறேன்' என்கிறார் தாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக