அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 17 ஜூன், 2010

அம்பலமூலா இலவச கண் சிகிச்சை முகாம்



பந்தலூர் : பந்தலூர் அருகே அம்பலமூலா பகுதியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 120பேர் பங்கேற்று பயனடைந்தனர்.நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தமிழ்நாடு அறக்கட்டளை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையம், நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்க மருத்துவமனை இணைந்து அம்பலமூலா பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. டாக்டர் லோகோஸ் பேசினார். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊட்டி அரசு மருத்துவமனை கண் நோய் பிரிவு மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். 120 பேர் பங்கேற்று பயனடைந்ததில் 20பேர் கண் புரை அறுவை சிகிச்சைக் காக ஊட்டி அரசு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் சங்க திட்ட மேலாளர் பீட்டர் ரொனால்டோ தலைமை வகித்தா. மைய தலைவர் சிவசுப்ரமணியம், கண்பரிசோதகர்கள் முத்துராஜ், நாகூர்கனி, கலாவதி மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள், மையத்தின் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அம்பலமூலா  இலவச  கண் சிகிச்சை முகாம்  12-06-2010 அன்று நடைபெற்றது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக