அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 25 ஜூலை, 2010

"தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' 30ம் தேதி கோவையில் விழிப்புணர்வு

ஊட்டி : "தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' என்ற தலைப்பில், கோவையில் வரும் 30ம் தேதி, விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுகிறது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய - மக்கள் மைய தலைவர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:தரமான பொருட்களை விற்பனை செய்ய, தரமான பொருட்கள் குறித்து அறிந்துக் கொள்ள, மத்திய அரசு, இந்திய தரக் கட்டுப்பாட்டு மையத்தை (பி.ஐ.எஸ்.,) செயல்படுத்தி வருகிறது. தரமான பொருட்களை கண்டறிதல் மற்றும் தர முத்திரைகள், தர நிர்ணய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய தர கட்டுப்பாட்டு அமைவனம், கோவை கருமத்தம்பட்டி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் மையம் சார்பில், கோவையில் வரும் 30ம் தேதி தர விழிப்புணர்வு குறித்த, "தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சியை நடத்துகிறது.தர நிர்ணய சட்டங்கள், தர முத்திரைகள், தர முத்திரை குத்தப்பட்ட பொருட்களில் வேலை குறைபாடு நிவர்த்தி செய்தல், புகார் தெரிவித்தல், நிவாரணம் பெறல், போலி தர முத்திரைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், "கூடலூர் பாதுகாப்பு, மக்கள் மையத்தை அணுகலாம்; 94885-20800 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தர முத்திரைகள், போலி பொருட்கள் குறித்த புகார் இருப்பினும் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக