அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 25 ஜூலை, 2010

தெரியவில்லை வங்கியின் எல்லை பார்வைக்கு வைத்தால் பயன்

கூடலூர் : "நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தங்களின் எல்லைப் பகுதியை, வங்கிகளில் ஒட்டி வைக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல வங்கிகளில், மாணவ, மாணவியருக்கு கல்விக் கடன் வழங்க மறுத்து, வசிப்பிடம், வாடிக்கையாளர் சேவைக்கு உட்பட்ட பகுதியில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் தங்களுடைய சேவைப் பரப்பு வரையறுக்கப்பட்டது; இப்பகுதிகளில், சேமிப்பு கணக்கு, கடன் வழங்குதல், வைப்பு, முதலீடு பெறுதல் உட்பட சேவைகளை வழங்குகிறது. வங்கியின் சேவைப் பகுதிகள் குறித்தும், எந்த வங்கியில் கடன் பெறுவது என்பது குறித்தும் மக்களுக்கு தெரிவதில்லை. பிரச்னைக்கு தீர்வு காண, சேவை வழங்கும் பகுதி விபரங்களை, வாடிக்கையாளர்கள் அறிந்துக் கொள்ள, வங்கிகளில் ஒட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக