அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 12 ஜூலை, 2010

பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை

பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை



பந்தலூர்:"கல்வியில் சிறந்தால், எதிர்காலம் வளமுள்ளதாக அமையும்' என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.பொதுத் தேர்வில் சாதித்த பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பந்தலூரில் செயல்படும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள்  மையம்  மற்றும்  காந்தி சேவை மையம் சார்பில், பாராட்டு கேடயம் மற்றும் பணமுடிப்பு, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.


நடப்பாண்டு சாதித்த மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி, பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. ஆசிரியர் மாரப்பன் வரவேற்றார். பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர்.கணேசன் தலைமை வகித்து பேசுகையில், படிப்பதற்கு ஏதுவான ஊக்குவிப்பு, அரசு உதவி வழங்கப்படுகிறது. மாணவர்கள் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற முன்வர வேண்டும்,'' என்றார்.


சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, பந்தலூர் துணை தாசில்தார் குமார் ராஜா பேசுகையில், பெற்றோருக்கு மகிழ்ச்சி அளிக்க மாணவர்கள் சாதிக்க வேண்டும். சிரமம் பாராமல் படித்தால், எதிர்காலம் வளமுள்ளதாக மாறும்,'' என்றார்.காந்தி சேவை மைய செயலர் சந்திரன் பேசுகையில், ""படிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே அதிகரிக்க, பரிசளிப்பு விழா நடத்தப்படுகிறது. பெற்றோர் வழிகாட்டுதலின் படியும், ஆசிரியர்கள் ஆலோசனையின் படியும் கீழ்படிந்து, படிப்பில் மட்டும் நாட்டம் செலுத்தி, சாதிக்க உழைக்க வேண்டும்,'' என்றார்.


பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ரஷீதா, பிளஸ் 2 வகுப்பில் முதல் இடம் பெற்ற வாசுகி ஆகியோருக்கு, கேடயம், பணமுடிப்பு வழங்கப்பட்டன.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம்.  பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) செந்தில், ஆசிரியர் சித்தானந்த், மற்றும்
காந்தி சேவை மைய தலைவர் தாஸ், பொருளாளர் கனகா,
செயற்குழு உறுப்பினர்கள் கபீர், அபுதாகீர், செந்தாமரை பங்கேற்றனர். மைய அமைப்பாளர் நவுசாத் நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக