அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 11 ஆகஸ்ட், 2010

மக்கள் மையத்தில் இணைய அழைப்பு

 "நாட்டின் பிரச்னைகளை தட்டிக்கேட்க அனைவரும் மக்கள் மையத்தில் இணைய வேண்டும்,' என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய-மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தலில் எதற்காக ஓட்டளிக்கிறோம் என்பது குறித்து அறியாதது; பிரச்னைகள், தவறுகளை தட்டி கேட்காமல் இருப்பது போன்றவற்றின் விளைவாகவே நாட்டிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலும், சுகாதாரமும் மனிதனுக்கு முழுமையாக கிடைத்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அரசு சுகாதார நிலையம், அரசு துறை, பள்ளிகளில் குறைந்தபட்ச கனிவான கண்ணியமான வரவேற்பு கூட கிடைப்பதில்லை. 
மன்னர் ஆட்சியில் நடக்கும் தவறுகளுக்கு மன்னர்களே பொறுப்பேற்றனர். மக்களாட்சியில் அத்தனை தவறுகளுக்கும் மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்

.இனி மின்சார அலுவலகம், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடைகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகளை அனைவரும் கண்காணிக்க வேண்டும்; 


இது உரிமை மட்டுமின்றி கடமையும் ஆகும். இதற்காக அனைவரும் மக்கள் மையத்தில் இணைந்து செயலாற்ற வேண்டும்.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 250க்கும் மேற்பட்ட மக்கள் மையங்கள் செயல்படுகின்றன. மக்களுடைய தேவை எதுவாக இருந்தாலும், ஆலோசனைகளையும், ஆதரவுகளையும் நமக்கு நாமே தேடிக்கொள்ளலாம். 

மக்கள் மனுதாரர்கள் என்பதை மாற்றி மன்னர்கள் என்பதை அரசுக்கு புரிய வைப்போம். ஓட்டைகள் நிறைந்த சட்டங்களை திருத்தவும் சாதனை புரியவும் அனைவரும் ஒன்று சேருவோம். 

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் மையத்தில் சேர, 9488520 800, 9345398085 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக