அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 29 செப்டம்பர், 2010

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் ஏழு நாட்கள் சிறப்பு முகாம், நேற்று நுந்தளா கிராமத்தில் துவக்கப்பட்டது.

திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா மேற்பார்வையில், ஹெத்தையம்மன் கோவில் செல்லும் பாதை, பள்ளி செல்லும் பாதை, மயானத்துக்கு செல்லும் பாதை, அண்ணா நகரில் நடைபாதை மற்றும் கழிவு நீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அட்டுபாயில் முலுக்கா மேஸ்திரி நஞ்சன் பொதுநல அறக்கட்டளை மற்றும் ஊட்டி லயன்ஸ் சங்கத்துடன், இலவச எலும்பு மற்றும் மூட்டு, பொதுநல மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. கோவையை சேர்ந்த டாக்டர்கள் சதீஷ் குமார், ராமலிங்கம், ராமசந்திரன், விவேகானந்தன் சிகிச்சை அளிக்க உள்ளனர்.

மாவட்ட நுகர்வோர் சங்கப் பொறுப்பாளர்கள் சிவசுப்ரமணியுடன் இணைந்து, நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம்,
ஊட்டி தலைமை நிலைய டாக்டர்கள் சாந்தகுமார், திலீப் தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட உள்ளன. முகாம் ஏற்பாடுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மையப்பன் ஆலோசனையின் படி, தலைமை ஆசிரியர் செவணன், மாவட்ட தொடர்பு அலுவலர் இளமுருகன், லயன்ஸ் சங்க தலைவர் டெரன்ச் ராஜேஷ், ஓவிய ஆசிரியர் பழனியப்பன் உட்பட பலர் மேற்கொண்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக