அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 4 அக்டோபர், 2010

உரிமைகளை தெரிந்து கொண்டால், சமூகத்தில் ஏமாற்றப்படுவதிலிருந்து விடுபடலாம்

 "கடமை மற்றும் உரிமைகளை தெரிந்து கொண்டால், சமூகத்தில் ஏமாற்றப்படுவதிலிருந்து விடுபடலாம்,'' என, நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மைய  மக்கள் மையம் சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு, பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. சங்க ஆலோசகர் சில்வஸ்டார் வரவேற்றார். தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது:
கடந்த 1896ம் ஆண்டு, அமெரிக்காவில் நுகர்வோர் சங்கம் துவக்கப்பட்டு, 1973ல், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி நுகர்வோர் தினத்தை அறிமுகப்படுத்தினார். 1986ம் ஆண்டு, இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் துவக்கப்பட்டது.  பொதுமக்களிடையே மட்டுமல்லாமல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையேயும் நுகர்வோர் மன்றங்கள் துவக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக, கூடலூர், பந்தலூர் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், நுகர்வோர் விழிப்புணர்வு தின போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.  நுகர்வோர் விழிப்புணர்வு முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே, மக்கள் தெளிவு பெறுவர்,'' என்றார். 


வக்கீல் ஜெயசீலன் பேசுகையில், ""ஏமாற்றப்படும் நுகர்வோர், நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய வக்கீலை நாட வேண்டியதில்லை. தக்க ஆதாரங்களுடன், தானாகவே சென்று புகாரை பதிவு செய்தால் உரிய தீர்வு காணப்படும். கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள பல மளிகைக் கடைகளில், வாங்கும் பொருட்களுக்கு "பில்' தரப்படாத நிலையில், நுகர்வோர் பாதிக்கப்படும்போது, புகார் தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எந்தப் பொருளை வாங்கினாலும், "பில்' பெற மறக்கக் கூடாது.  மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், தேசிய குறைதீர் ஆணையங்களில், பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப வழக்குப்பதிவு செய்து பயன்பெறலாம்,'' என்றார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் சம்பத், சிறப்பு அழைப்பாளராக பேசுகையில்,  ""விளம்பரங்களால் மனித சமுதாயம் ஈர்க்கப்பட்டு, ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். பாதுகாப்பு, தேர்ந்தெடுத்தல், முறையிடுவது, குறை தீர்ப்பது, கல்வி உட்பட உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள, நுகர்வோர் முன்வர வேண்டும். விழிப்புடன் மற்றும் ஈடுபாட்டுடன் இருப்பது, தேவைக்கு அதிகமான நுகர்வை தவிர்ப்பது, தவறு செய்யும் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் குறித்து புகார் செய்வது, நுகர்வோரின் கடமையாக உள்ளது.  தரமானப் பொருட்களையும், சேவைகளையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளவும், நுகர்வோர் நலனை பாதுகாக்க ஒன்றாக குரல் கொடுக்கவும் முன்வரும் போது, ஏமாற்றத்திலிருந்து விடுபடலாம்,'' என்றார்.  


வருவாய் ஆய்வாளர் சிக் அனுமான், எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, ராஜன், ஐயாவு, ஆசிரியர் சூரியநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக