அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 19 அக்டோபர், 2010

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சார்பில் செயல்படும் பார்வையிழப்பு தடுப்பு சங்கம், பெயரளவில் முகாம்களை நடத்தி, கணக்கு மட்டும் காண்பிக்கும் பணியில் உள்ளதால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சிகிச்சையளிக்க வரும் பிரபல மருத்துவமனைகள், முகாம்களில் பங்கேற்பதில் ஆர்வம்காட்டுவதில்லை.






மத்திய அரசு நிதி மூலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் பார்வையிழப்பு தடுப்பு சங்கம் செயல்படுகிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை நான்கு லட்சம் வரை , கண் தொடர்பான சிகிச்சைக்காக இதன் சங்கத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது.





இதற்காக பிரபல கண் மருத்துவமனைகள் தாராளமாக பங்கேற்க உள்ளநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் பெயரளவில் நடக்கும் முகாமால், மதுரை அரவிந்த், மீனாட்சி மிஷன் , கிருஷ்ணன்கோவில் சங்கரா மருத்துவமனைகள் போன்ற பிரபல மருத்துவமனைகள், பங்கேற்க விரும்பாமல் உள்ளனர்.





இந்நிலையில், அரசு மருத்தவமனை சார்பில் பெயரளவில் முகாம்களை நடத்துவதும், ஏற்கனவே வருமுன்காப்போம் முகாம் நடக்கும் இடங்களில் பங்கேற்று, சங்கத்தின் மூலம் முகாம் நடந்ததுபோல் காண்பித்தும் வருகின்றனர்.





முகாம்களில் பிரபல மருத்துவமனைகள் பங்கேற்காததால் பொது மக்கள் பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மூலம் நடத்தும் முகாம்களில் சிகிச்சை பெற விரும்புவதில்லை. அவ்வாறு சிகிச்சைக்கு வந்தாலும், மருத்துவமனைகளில் மின்வசிறி போன்ற வசதிகள் இல்லாததும், நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாலும், கழிப்பறை வசதி இல்லாமல் சுகாதாரமற்றநிலையில் உள்ளதால், பொது மக்களும் தொற்றுநோய் அச்சத்தில் சிகிச்சை பெற தயக்கம் காட்டுகின்றனர். முன்பு சிறப்பாக செயல்பட்டு வந்த பார்வையிழப்பு தடுப்பு சங்கம், கடந்த சில மாதங்களாக பெயரளவில் நிதியை பயன்படுத்தி, கணக்கு காண்பிக்கும் வகையில் செயல்பட துவங்கிவிட்டது. மத்திய அரசின் நிதியும் முறைகேடாக பயன்படுத்தும் நிலையும் சத்தமின்றி உருவாகிவருகிறது.





இதுமட்டுமன்றி மாலை நேர சிகிச்சை பிரிவு இருந்தும் செயல்படுவது இல்லை, உள்நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறையில் கதவுகள் இல்லாமல் திறந்தவெளியாக உள்ளதால், துர்நாற்றத்தால் நோயாளிகள் பரிதவிக்கின்றனர். இங்குள்ள ஆய்வகமும் சுத்தம்செய்து பல ஆண்டுகளாகின்றன. இதனால் சிகிச்சைக்கு வரும்நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால் கணக்கில் மட்டும் நோயாளிகள் அதிகமாக வருவதாக காண்பிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக