அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

EYE

கைகழுவுவதில் இவ்ளோ விஷயமா?

-
கையை நீங்கள் தினமும் கழுவி சுத்தம் செய்வீர்களா? சாப்பிடும் போதும் சரி, வேறு சமயங்களிலும் எத்தனை நொடிகள் கையை சோப்பு போட்டு சுத்தம் செய்வீர்கள்? ஹேண்ட் வாஷ் திரவத்தை வாங்கி பயன்படுத்துபவரா நீங்கள்?
— என்னடா இது, கை கழுவுவதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், படித்து முடித்தபின், இனி, தினமும் ஒழுங்காக கைகளை கழுவுவீர்கள்.
நாகரிக உலகில், இப்போதெல்லாம், எப்படி பல் துலக்குவது, எப்படி கையை கழுவுவது என்று பயிற்சி வகுப்பு துவங்கினால் கூட, ஆச்சரியப் படுவதற்கில்லை.
தனி நபர் சுத்தத்தில் நாம் மிகவும் பின்தங்கியிருப்பதால்தான், புதுப்புது வைரஸ் நோய்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.
உங்கள் கைகள், எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறது என்று நீங்கள் என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா?
உடல் கோளாறுகளை அண்ட விடாமல் இருக்க, கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிக, மிக அவசியம். பன்றிக்காய்ச்சல் நோய் வரும் வரை, கையை சுத்தமாக கழுவுவது பற்றி, பலருக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இருந்ததில்லை.
ஆனால், கைகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், அவற்றில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் பரவி அதன் மூலம், ஒருவருக்கு அந்த நோய் வரும் ஆபத்து உண்டு என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்த பின் தான் மக்கள் விழித்துக் கொண்டனர்.
பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க, “ஹேண்ட் சேனிட்டர்’ மற்றும் “ஹேண்ட் வாஷ்’ லோஷன்கள் மூலம் கையை கழுவ வேண்டும்; அப்படி செய்தால், வைரஸ் தாக்காது என்று அறிவிப்பு வெளிவந்ததும், இந்த லோஷன்கள் விற்பனை கொடிகட்டிப்பறந்தது. தரமான, “ஹேண்ட் சேனிட் டர்’ லோஷன்களை சில நிறுவனங்கள் தான் தயாரித்து விற்பனை செய்தன.ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள், பெயரளவுக்கு இவற்றை புதுப் புது பெயர்களில் வெளியிட்டு, சந்தையில் குவித்தன.
எது நல்ல, “ஹேண்ட் சேனிட்டர்’ என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? 60 முதல் 90 சதவீதம் வரை ஆல்கஹால் கலந்த சேனிட்டர்களாக இருந் தால் தான் நல்லது.
வைரஸ்களை அப்புறப் படுத்தி, கையை சுத்தப்படுத்த ஆல்கஹால் அடிப்படையிலான, திரவ சாதனங்கள் தான், சிறந்தது என்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதெல்லாவற்றுக்கும் மேலாக, தரமான சோப்பால் கையை சுத்தப்படுத்தினாலே போதும்.
தண்ணீரில் கைகளை கழுவி, சோப்பு போட்டு சுத்தம் செய் தால் தான் இடுக்குகளில் உள்ள கிருமிகள் நீங்கும்; கைகளும் சுத்தமாகும்.
குறிப்பாக, ஆன்டி பாக்டீரியல் லோஷன்களை விட, சோப்பு போட்டு கழுவுவதுதான் மிக வும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கைகளை சுத்தம் செய்யும் போது, குறைந்த பட்சம் 30 நொடிகளாவது கைகளை சோப்பு, லோஷன்கள் மூலம் சுத்தம் செய்து அதன் பின், தண்ணீரில் கழுவ வேண்டும்.
டென்ஷன்…’ அர்ஜென்ட்… என்று எல்லாம் சாக்கு போக்கு சொல்லாமல், கை சுத்தம் செய்து, நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்து கொள் வீர்கள்தானே!

கண் பார்வைத்திறன்

1) கண்களை பாதிக்கும் பொதுவான கண் நோய்கள் யாவை?
கண்களை பாதிக்கும் சில காரணிகள்:
க்ளைகோமா
தூரப்பார்வை
கிட்டப்பார்வை
ஸ்டை (ஸ்டை என்பது கண்ணீர் சுரப்பியை தடுக்கும் கண்ணின் மேற்புறத்தில் தோன்றும் ஒரு தொற்று ஆகும்)
கட்டிகள்
தொற்றுகள்
கண்புரை உலர்ந்த கண்
2) கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?
இருளில் பார்வையை சரிபடுத்துதலில் சிரமம்
இரட்டை தோற்றம்
சிவந்த விழிகள்
கண் எரிச்சல் மற்றும் வீக்கம்
கண் மற்றும் கண்களை சுற்றி வலி
அதிகப்படியான கண்ணீர் சுரத்தல்
கண் உலர்ந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல்
தெளிவில்லாத பார்வை திறன்
காணும் காட்சியின் மத்தியில் கருப்பு புள்ளி தோன்றுதல்
கண்களின் நிறங்களில் தோன்றும் நிற மாற்றம்
பார்வை திடீரென்று தெளிவில்லாமல் மேலும் குழப்பத்துடன் தோன்றுதல்
3) சிமிட்டுதல் கண்களுக்கு உதவுமா?
சிமிட்டுதல் விழி உருளைகளை கண்ணீரால் கழுவ மட்டும் உதவுகிறது. அவை கண்களை சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. யாரேனும் நம் கண்களை குத்தினால் நாம் அனிச்சையாக நம் கண்கனை சிமிட்டுவோம்.
4) ஒரு வருடத்தில் நாம் எத்தனை முறை கண்களை சிமிட்டுகிறோம்?
வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது. வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது.
5) காதில் தங்க வளையம் அணிவது கண்பார்வை திறனை மேம்படுத்துமா?
இது ஒரு கட்டுக்கதை. காதில் தங்க வளையம் அணிவதால் கண்பார்வை மேம்படும் என்பதுமூட நம்பிக்கையாளர்களின் எண்ணம்.
6) மிகவும் இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது கண்களை பாதிக்குமா?
இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது க்ளைகோமா தோன்றும் வாய்ப்பினை அதிகப்படுத்தும்என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
7) மங்கிய விளக்கொளியில் படிப்பது கண்களுக்கு கேடு விளைவிக்குமா?
மங்கிய விளக்கொளி தங்கள் பார்வைத்திறனை பாதிக்காது என்றபோதும், அது உங்கள் கண்களை அதிக தளர்வடையச் செய்யும். படிப்பதற்கான சிறந்த வழியானது விளக்கின் ஒளி புத்தகத்தின் பக்கங்களில் விழும்படி படிக்க வேண்டும், உங்கள் தோள்களின் மீது விழும்படி படிக்க கூடாது.
8) எனது கண்களுக்கான சிறந்த உணவு எது?
பழைய பரிந்துரையான காரட் சிறந்த உணவு என்பது உண்மையாகும். கண்புரை மற்றும் மாசு சீர்கேட்டினை தடுப்பதற்கு நம் கண்களில் இயற்கையாக அமைந்துள்ள காரடெனோய்ட்ஸ் லூய்டின் மற்றும் ஜியாக்சேன்தின் போன்ற பொருட்கள் காரட்டில் உள்ளது.
9) எனது கண்களுக்கான சிறந்த பழங்கள் யாவை?
பப்பாளி, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்கள் சிறந்தது.
10) பிறந்த குழந்தையின் அழுகையில் கண்ணீர் வருவதில்லையே ஏன்?
தோராயமாக ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகளின் கண்கள் கண்ணீரை சுரப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக