அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

"இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்டும்'

 

 
 
 
ஊட்டி : "இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்டும்' என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜீவ் ஸ்ரீ வஸ்தவா கூறினார். ஊட்டி மரவியல் பூங்காவில் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், உலக சதுப்பு நில பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊட்டி சி.எஸ்.ஐ., ஜெல் நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.எஸ்.ஐ., மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்று இயற்கை காப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீ வஸ்தவா பேசுகையில், ""உலகம் முழுவதும் பிப்., 2ம் தேதி உலக சதுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் பல்வேறு சதுப்பு நிலங்கள் நிலை மாற்றப்பட்டுள்ளன. இவைகளினால் காற்று, நீர், ஒளி மாசு ஏற்பட்டு பல நிலைகளிலும் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றன. மனிதர்கள் மட்டுமின்றி இயற்கையும், இயற்கை வாழ் நீர் வாழ்வினங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களும் பெரிதும் பாதிக்கின்றன. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பல ஆடம்பர பொருட்கள் இயற்கையை பாதிப்படைய செய்வதுடன் சிறிய உயிரினங்களின் வாழ்வையும் சிதைக்கின்றன. வனத்தீயினால் நீலகிரியில் மிக முக்கிய வன உயிரின மண்டலமான முதுமலை தேசிய பூங்காவான முக்கூர்த்தி போன்ற இயற்கை பாதுகாப்பு பகுதிகள் சேதமடைகின்றன. நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் இயற்கையை பாதிக்காத பொருட்களாக பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தும் சோப்பு முதல் எழுது பொருட்கள் மற்றும் இதர உபயோக பொருட்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் நம்பக பொருட்களாக அமைத்துக் கொள்ள வேண்டும். இயற்கை நமக்கு நல்ல நீர், காற்று, நல்ல சூழலையும், பலவித நன்மைகளையும் தருகிறது. நாமும் இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் இயற்கை நேசிக்கும் குடும்பமாக மாற்ற வேண்டும்,'' என்றார். சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு பேசுகையில், ""சதுப்பு நிலங்கள் சோலைக்காடுகள், மலைகளை ஒட்டிய நீர்வளங்கள் அடங்கிய பகுதியாகும். இவை பல வகையில் நமக்கு பயன் தருகின்றன. சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் போது ஏற்பட்ட உயிர் சேதங்கள், பொருட்சேதங்கள் அதிகரிக்க கடல் சார்ந்த பகுதிகளில் இருந்த மாங்ரோ காடுகள் அழிக்கப்பட்டதே ஆகும். சதுப்பு நிலங்களில் உள்ளூர் தாவரங்கள், மரங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நீண்ட கால பாதுகாப்பினை சதுப்பு நிலங்கள் பெறும்,'' என்றார். நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ""சதுப்பு நிலங்களில் பல்வேறு உயிரினங்கள் மூலிகை செடிகள் உள்ளன. இங்குள்ள நீராதாரத்தை நம்பியே இவை வாழ்கின்றன. சதுப்பு நிலங்கள் அழியும் போது, இதை சார்ந்துள்ள உயிரினங்கள், தாவரங்கள் அழிந்து போகிறது. வீடுகளில் பூச்செடிகள் வளர்ப்பது போல் மூலிகை செடிகளையும் வளர்க்க வேண்டும்,'' என்றார். ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இவற்றை அரசும் மக்களும் காப்பாற்ற முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""இயற்கையை பாதுகாத்ததினால் சுத்தமான காற்று, நீர், உணவை முன்னோர்கள் பெற்றனர். அதேபோல வருங்கால சந்ததியினர் நல்ல சூழலில் வாழ நாம் தற்போதுள்ள இயற்கையை காப்பாற்ற முன்வரவேண்டும்,''என்றார். மாணவர்களுக்கு மரவியல் பூங்காவை சுற்றி காண்பித்து அங்குள்ள சதுப்பு நில பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியை ஹெலினா வரவேற்றார். ஆசிரியர் ஹொனரின்வுட் நன்றி கூறினார்.
 
இயற்கையைப் பாதுகாக்கும் பொருள்களை பயன்படுத்த வேண்டும்



உதகை, பிப். 2: இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்களையே பயன்படுத்த வேண்டுமென முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜீவ் ஸ்ரீவத்சவா வலியுறுத்தினார்.உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியவற்றின் சார்பில் உலக சதுப்பு தினம் உதகையில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜீவ் ஸ்ரீவத்சவா பேசியதாவது:தற்போதைய சூழலில் பல்வேறு சதுப்பு நிலங்களின் நிலை மாற்றப்பட்டுள்ளது. காற்று மாசு, நீர் மாசு, ஒலி மாசு உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. அத்துடன் சதுப்பு நிலங்களை நம்பி வாழும் நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்கள் பெரிதும் பாதிப்படைகின்றன. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் சில ஆடம்பர பொருட்கள் இயற்கையை பாதிப்படையச் செய்கின்றன. எனவே, நாம் பயன்படுத்தும் பொருட்கள் இயற்கையைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இயற்கையை நமது நண்பனாக நேசிப்பதோடு, ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் தங்கள் குடும்பத்தினரையும் இயற்கையை நேசிக்கும் குடும்பமாக மாற்ற வேண்டுமென குறிப்பிட்டார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேல், சதுப்பு நிலங்கள் பல வகைகளிலும் மனிதர்களுக்கு பயனளிப்பவை எனவும், சுனாமி போன்ற பேராபத்துகள் ஏற்படும்போது மாங்குரோவ் காடுகள்தான் அவற்றிலிருந்து பாதுகாக்க முடிந்தவை என்பதால் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும், ஒவ்வொரு வீட்டிலும் மூலிகைத் தாவரங்களை வளர்க்கும் மன நிலையை பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டார். நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ், சதுப்பு நிலங்கள் பல்வேறு உயிரினங்களின் வாழ்வுக்கும் ஆதாரமாக விளங்குவதாகவும், சதுப்பு நிலங்கள் அழியும்போது அவற்றிலுள்ள உயிரினங்களும், தாவர வகைகளும் அழிந்து போவதால் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்த்தனன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டிலுள்ள சதுப்பு நிலங்கள் அழியும் தருவாயில் உள்ளதாகவும் அவற்றை அரசும், மக்களும் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், நமது முன்னோர்கள் இயற்கையைப் பாதுகாத்ததாலேயே நாம் தற்போது சுத்தமான காற்று மற்றும் நீரைப் பெறுகின்றோம் என்பதால், நமது சந்ததியினருக்கும் அத்தகைய வாய்ப்பை விட்டுச் செல்ல வேண்டுமெனவும் குறிப்பிட்டார். உதகை சிஎஸ்ஐ ஜெல் மெமோரியல் பள்ளி மற்றும் சிஎஸ்ஐ மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஆசிரியை ஹெலினா வரவேற்றார். முடிவில் ஹெனாரின் உட் நன்றி கூறினார்.
 
 
 
 
‘Wetlands crucial in preventing pollution'
Special Correspondent
People urged to live in harmony with Nature

‘Wetlands or marshy areas help prevent landslides'
Call to avoid indiscriminate use of plastic items

Photo: M. Sathyamoorthy

Promoting conservation: The Field Director, Mudumalai Tiger Reserve, Rajiv K.Srivastava, speaking at the World Wetlands Day celebrations in Udhagamandalam on Wednesday.
Udhagamandalam: The Nilgiris is a natural heritage and many of its features like its wetlands are unique.
This was underscored at a function organized by the Public Awareness Association of Udhagamandalam and the Gudalur Consumer, Human Resource and Environment Protection Society at the Arboretum (tree garden) here on Wednesday in connection with the observance of World Wetlands Day.
Students
Addressing the gathering which included many school students, the Field Director, Mudumalai Tiger Reserve, Rajiv K.Srivastava pointed out that wet lands or the marshy areas played a crucial role in preventing pollution. They also helped prevent landslides.
Stating that they should be protected at all costs, he said that in the Mukurthi National Park alone they extended over about 200 hectares.
Animals
If they become dry not only the people but also many varieties of aquatic birds and animals would be affected.
Stating that the indiscriminate use of plastic items should be avoided, he urged the people to live in harmony with Nature.
The Field Officer, CPR Environmental Education Centre M.Kumaravelu said that wetlands reduced the impact of natural calamities.
The Secretary, Public Awareness Association of Udhagamandalam, G.Janardhanan, said that many of the wetlands in and around Udhagamandalam are on the verge becoming dry.
The Managing Trustee, Nilgiris Environment and Cultural Service Trust (NEST), V.Sivadass, and Sivasubramaniam of the Gudalur Consumer, Human Resource and Environment Protection Society also spoke.
During the function, the children took a pledge to protect the wetlands.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக