அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 19 ஜூலை, 2011

மகளிர் குழுக்களின் கூட்டமைப்பு கூட்டம்

தாமரை மகளிர் குழு ஊக்குனர் நாராயணி வரவேற்றார்.
குறிஞ்சி மகளிர் குழு நிர்வாகி சாஜி தலைமை வகித்தார். கிரேசி மகளிர் குழு நிர்வாகி இந்திராணி, சினேகா மகளிர் குழு நிர்வாகி மேரி முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், வார்டு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சூரியா மகளிர் குழு நிர்வாகி ஓமனா நன்றி கூறினார்.
 கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மகளிர் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை போட்டியிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கசநோய் குறித்தும் விளக்கமளித்தார்.

வார்டு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்
கூட்டத்தில் காசநோய், பொது சுகாதரம், தேர்தலில் பங்கேற்பது குறித்து விரிவாக பேசப்பட்டது. மேலும் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை போட்டியிட வைப்பது; குழு வேட்பாளர்களுக்கு அனைத்து மகளிர் குழுவினரும் ஒத்துழைப்பது; நோய்பரவுவதை தடுக்கவும், பொது சுகாதாரத்தை பேணிகாக்கவும் வீட்டிற்கு ஒரு தனி கழிப்பிடம் அமைத்து கொள்ளுதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக