அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 24 ஆகஸ்ட், 2011

மேங்கோரேஞ்ச் மருத்துவமனையில் காசநோய்

 பந்தலூர் அடுத்துள்ள மேங்கோரேஞ்ச் மருத்துவமனையில் காசநோய் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையமும், அம்பலமூலா பகுதி நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச் சங்கமும் இணைந்து நடத்திய முகாமிற்கு டாக்டர் ரமாபிரகாஷ் தலைமை வகித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்பிரமணி, நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச் சங்க திட்ட மேலாளர் ரொனால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பந்தலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் விவேகானந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வின் அவசியம் குறித்து விளக்கமளித்தார்.

ஆதிவாசிகள் நலச் சங்க ஓருங்கிணைப்பாளர் சோமன், காசநோய் தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்.அரசு மருத்துவமனை காசநோய் மேற்பாற்வையாளர் யசோதன், நம்பிக்கை மையத்தின் கவிதா ஆகியோர் விளக்கமளித்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர். மருந்தாளுநர் கந்தசாமி வரவேற்றார். 

தனிஸ்லாஸ் நன்றி கூறினார். 


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக