அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 24 ஆகஸ்ட், 2011

பந்தலூரில் தெருமுனை பிரசாரம்

பந்தலூரில் தெருமுனை பிரசாரம்
 

பந்தலூர்:எய்ட்ஸ் கட்டுப்பாடு, மகளிர் நலன் பேணுதல் குறித்த தெருமுனை பிரசாரம் பந்தலூர் பகுதியில் நடந்து வருகிறது.

தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், நீலகிரி எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியை 

பந்தலூரில் டாக்டர் அறிவழகனும், மேங்கோரேஞ்ச் பகுதியில் டாக்டர் ரமாபிரதாப் துவக்கி வைத்தனர். 

பிரசாரம் பந்தலூர், மேங்கோரேஞ்ச், அத்திக்குன்னா, உப்பட்டி, அய்யன்கொல்லி, எருமாடு, சேரம்பாடி, சேரங்கோடு, நெலாக்கோட்டை, பிதர்காடு, பாட்டவயல் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. 

கலைக்குழு மூலம் எய்ட்ஸ் வராமல் தடுக்கும் முறைகள், தாய்சேய் நலன் பாதுகாத்தல், மகளிர் நலன் பேணுதல், இரத்த  தானம், ஆணுறை பயன்பாடு குறித்து ஆடல், பாடல் மூலம் மக்கள் மத்தியில் தெரிவிக்கின்றனர். 

நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம்.  நம்பிக்கை மைய ஆலோசகர்கள் அழகுராஜா, விஜய்சாரதி,ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்,  மற்றும் குழுவினர் பங்கேற்றனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக